Skip to content

கதையோட்டம்

November 4, 2023

கதையோட்டம் தெரிந்துதான்
முடிவுக்குப் பயணிப்பேன் என்று
நெடுங்கதைகளின் துவக்கத்தில்
எந்தக் கதாபாத்திரமும் சொல்வதில்லை

ஒவ்வொரு திருப்பமும்
ஒவ்வொரு கதைமுடிச்சும்
கதாபாத்திரத்திற்குப் புதியதே

எல்லாக் கதைமாந்தரும் முன்னகர்கிறார்கள்
சிலவன மாற்றம் காண்பித்து
பெருந்தருணங்களைத் தாங்குமளவு மேலெழுகின்றன
அத்தகைய மாந்தரின் கதையே நாயகரின் கதையாகிறது
ஏற்றத்திற்குப் பின் வீழ்ச்சியடைவதும் இயல்பே

மூன்றாவது ஆக்டில் வெற்றிபெற்றுவிடுவாய் என்ற உறுதிப்பாடு
வாழ்க்கையில் இல்லை
முன்னகரும் தன்மை மட்டுமே கதாபாத்திரத்திற்குரியது.

Leave a Comment

Leave a comment