கதையோட்டம்
கதையோட்டம் தெரிந்துதான்
முடிவுக்குப் பயணிப்பேன் என்று
நெடுங்கதைகளின் துவக்கத்தில்
எந்தக் கதாபாத்திரமும் சொல்வதில்லை
ஒவ்வொரு திருப்பமும்
ஒவ்வொரு கதைமுடிச்சும்
கதாபாத்திரத்திற்குப் புதியதே
எல்லாக் கதைமாந்தரும் முன்னகர்கிறார்கள்
சிலவன மாற்றம் காண்பித்து
பெருந்தருணங்களைத் தாங்குமளவு மேலெழுகின்றன
அத்தகைய மாந்தரின் கதையே நாயகரின் கதையாகிறது
ஏற்றத்திற்குப் பின் வீழ்ச்சியடைவதும் இயல்பே
மூன்றாவது ஆக்டில் வெற்றிபெற்றுவிடுவாய் என்ற உறுதிப்பாடு
வாழ்க்கையில் இல்லை
முன்னகரும் தன்மை மட்டுமே கதாபாத்திரத்திற்குரியது.
Leave a Comment